
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் சமீப காலமாக உடல்நல குறைவினால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நுரையீரல் தோற்று பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாராம் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்று இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சீதாராம் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அதாவது கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக அவருடைய உடலை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதனால் அவருடைய உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படாது. அதற்கு பதிலாக அவர் உடலை மருத்துவமனைக்கு தானமாக குடும்பத்தினர் கொடுத்துவிடுவார்கள்.