
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா நகரில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ரஷ்யா இராணுவ தலைமைத் தளத்தின் இயக்கத்துறை துணை தலைவர் யரோஸ்லாவ் மொஸ்காலிக் உயிரிழந்தார். இது, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட அடுத்த பெரிய தாக்குதலாகும்.
தாக்குதல் சம்பவம் இடம் பெற்றபோது, அவரது வீட்டிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த காரில் வெடிகுண்டு பதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது, கார் வெடித்து எரியத் தொடங்கியது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், காரில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றி எரிவது தெளிவாகக் காணப்படுகிறது. இந்த தாக்குதலுக்குப் பின்னால், ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
BREAKING:: A senior Russian military officer was just killed by a car bomb.
Yaroslav Moskalik, deputy chief of operations for Russia’s military General Staff, was killed in the explosion in the town of Balashikha.
Maybe they should have thought before invading a sovereign… pic.twitter.com/nDyCkpJ0vr
— Brian Krassenstein (@krassenstein) April 25, 2025
கடந்த ஆண்டில் ரஷ்யாவின் அணுசக்தி பிரிவின் தலைவர் லெப். ஜெனரல் இகோர் கிரில்லோவ், இதேபோன்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். அந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது யரோஸ்லாவ் மொஸ்காலிக் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னாலும் உக்ரைனின் ரகசிய புலனாய்வுப் பிரிவுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய தாக்குதல்களை கடுமையாக கண்டித்து, குடியரசுத் தலைவர் புதினின் செயலை உலக அமைதிக்கு எதிரானதாக விமர்சித்துள்ளார். தற்போது வரை யாரும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ரஷ்ய புலனாய்வுத் துறைகள் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.