
ஐசிசி ஒன்பதாவது சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து. பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களுடைய பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த தொடரில் கடந்த 19ஆம் தேதி கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் நியூஸிலாந்து அணி வெற்றியை பெற்றது.
சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 23ஆம் தேதி இந்திய அணியை துபாயில் சந்திக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தை வீசி முடிக்க தவறியதால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்திருக்கிறது ஐசிசி. அதன்படி ஒரு ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்கு வீசி முடிக்காத பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐந்து சதவீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றத்தை பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை எதுவும் நடக்கவில்லை.