
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு பயணிகளின் வசதிக்காக தாம்பரம், கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.