நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி டாஸ் செய்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி 20 ஓவர்களில் 218க்கு 5 ரன்கள் குவித்தது. டூப்ளசிஸ் 54, விராட் 47, ரன்களை குவித்தார்கள். அதன்பிறகு 21 ரன்கள் எடுத்ததால் பிளே ஆப் உறுதி செய்துவிடலாம் என்று இலக்கோடு களமிறங்கிய நிலையில் சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது, முதல் பலிலேயே ருதுராஜ் ஆட்டம் இழந்தார்.

கடைசியில் 191 /7 ரன்கள் மட்டுமே குவித்தது. தோனி 25 ரன்னில் அவுட் ஆக ஜடேஜா 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார். இதனை அடுத்து சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறிய பிறகு பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூம் தினேஷ் கார்த்திக் இது குறித்து பேசுகையில், நேற்று நடந்த சிறந்த விஷயம் என்னவென்றால் தோனி அந்த சிக்ஸரை மைதானத்திற்கு வெளியே அடித்தார். எங்களுக்கு ஒரு புதிய பந்து கிடைத்தது .அந்த பந்து வீச மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறியிருக்கிறார் .தோனி அடித்த பந்து கடைசி ஓவரில் 110 மீட்டர் சென்று கிரவுண்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.