
ஆல்வார் புறநகர் தொகுதிக்குச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ டிக்கா ராம் ஜுல்லி கடந்த 6-ம் தேதி ஆல்வார் நகரில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.
அவர் கோவிலில் வந்ததைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா, கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி, அங்குப் புனித நீர் தெளித்து பூஜை நடத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பாஜக, உடனடியாக நடவடிக்கை எடுத்தது. கியான்தேவ் அகுஜாவை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, அவருக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
A new political controversy has emerged in #Rajasthan after #BJP leader and former MLA #GyandevAhuja reportedly had Gangajal (sacred water) sprinkled at a #RamTemple following a visit by #TikaramJully, the Leader of Opposition in the Rajasthan assembly, who is from the #Dalit… pic.twitter.com/CvOyny1EE1
— Hate Detector 🔍 (@HateDetectors) April 8, 2025
பாஜக மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில், “மாநிலத் தலைவர் உத்தரவின்படி, நீங்கள் பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள். மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, “இந்த சம்பவம் பட்டியலின மக்களை பாஜக எப்படி பார்ப்பது என்பதை வெளிப்படுத்துகிறது” எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர். சமூகநீதி மற்றும் மத சமத்துவத்திற்கு எதிரான செயலாக இதை அவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் மட்டுமல்ல, சமூக அக்கறைகளையும் கிளப்பியுள்ளது.