
அமெரிக்காவில் கடந்த 2019 ம் ஆண்டு 2 பெண்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த வேடு வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. டெட்பூல் கில்லர் படத்தில் வேடு வில்சன் என்ற கதாபாத்திரம் உள்ளது. தனது பெயரும் அதே என்பதால் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்டார். அதோடு தன்னுடைய உடலில் டெட்பூல் கில்லர் என பச்சை குத்தியுள்ளார்.
இவர் முதலில் மெல்டன் என்ற பெண்ணை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார். அதற்கு முன் இருவரும் போதை பொருள் உட்கொண்ட பிறகு உடலுறவு செய்துள்ளனர்.
அதன் பின்பு மெல்டனின் (35) காரை எடுத்துவிட்டு, அவரது போனை பயன்படுத்தி தனது பெண் தோழியான மெலிஸ்சா மோன்டனேஸ்(41) என்பவருக்கு போன் செய்துள்ளார். பின் அங்கு வந்த பெண் தோழியை அடித்து உதைத்து, காரில் ஏற வற்புறுத்தியுள்ளார். இதனால் வில்சன் காரை எடுத்து புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்ற பிறகு சாலையில் ரூய்ஸ் என்ற பெண் காரை மறித்து உதவி கேட்டுள்ளார். அவரை காரில் ஏற்றிய வில்சன், கார் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு கழுத்தை நெரித்து காரில் இருந்து வெளியே தள்ளினார்.
பின்பு அவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் காரை அவர் மீது ஏற்றியுள்ளார். இந்தக் கொலையெல்லாம் அவர் திட்டமிட்டு செய்ததாக நீதிமன்றத்தில் விசாரணை மூலம் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு நீதிபதி மரண தண்டனை வழங்கினார்.
அப்போது கூட வில்சன் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக உள்ளார். இதற்கிடையில் சிறையில் இருந்த போது அவருக்கு ஆயிரக்கணக்கான காதல் கடிதங்கள் வந்துள்ளன. இவரது வளர்ப்புத் தாய் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று கெஞ்சினார். ஆனாலும் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.