
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதற்கு கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சீமான் மீது அரசு வழக்கறிஞர் முரளி என்பவர் தனிப்பட்ட வகையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் பெரியார் குறித்த அவதூறு பேச்சு தொடர்பாக சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு மணப்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.