மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின்(72) உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் ஆகஸ்ட் 19 ல் அனுமதிக்கப்பட்டார். அவரின் இறப்பு செய்தி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக நீதிக்கும் தொழிலாளர்களின் நலனுக்குமான ஆற்றலான போராட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.