
நாடு முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் குரு கிராமை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழி வாங்கிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. அதில் அந்த இளம் பெண் தனது முன்னாள் காதலனை பழி வாங்க திட்டமிட்டு ஆன்லைன் மூலம் 100 பீட்சாகள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.
அதோடு 100 பீட்சாவுக்கான பணத்தை “கேஷ் ஆன் டெலிவரி” மூலம் பெற்றுக்கொள்ளும் முறையில் ஆர்டர் செய்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவு விநியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களுடன் அந்த இளம் பெண் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த பெண்ணின் காதலன் நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் காதலர் தினத்தன்று இப்படி பரிசை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் எனவும், மற்றொரு பயனர் காதலித்ததால் அவருக்கு கிடைத்த பரிசு இது எனவும் பதிவிட்டுள்ளனர்.