இங்கிலாந்தில் மன்னராக இருப்பவர் 3ம் சார்லஸ். இவர் பல நாடுகளுக்கு சுற்றும் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு புற்றுநோய் இருக்கிறது. அந்த வகையில் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மன்னரும், ராணியும் இந்தியா வர திட்டமிட்டுள்ள நிலையில், ராணி எலிசபெத் இறந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அப்போதே மோடி மன்னர் மற்றும் ராணிக்கு விருந்தளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராணி மற்றும் மன்னர் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்துக்கும் செல்வதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான அந்தச் செய்தியில் மன்னர் மற்றும் ராணியின் இந்த பயணம் தயாராக உள்ளது, இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது மிகவும் ஊக்கம் அளிக்கிறது என்றும், அவர்களுக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.