தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறிய தீவு நாடு அமைந்துள்ளது. நவ்ரூ என்ற பெயர் கொண்ட இந்த நாடு 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. அதோடு உலகின் 3வது சிறிய நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் பசுபிக் பெருங்கடலின் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.

எனவே அந்நாட்டு அரசு அங்குள்ள மக்களை மேடான பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக நிதி திரட்டும் வகையில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்தத் திட்டம் என்னவென்றால் நவ்ரு நாட்டின் குடியுரிமையை ரூ. 90 லட்சத்திற்கு விற்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு “தங்க பாஸ்போர்ட்” வழங்கப்படும். மேலும் இதன் மூலம் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.