திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.