
இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 116 மீனவர்கள், 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.