சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்கள் ஆகியோரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி பி.சுசிலா, மகன்கள் பி.செந்தில்குமார், பிரபு மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரணை செய்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.