
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.