
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் மே 1-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தூதரகத்திற்கு வெளிய அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவால் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.