
தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது மகள் ஜமுனா ராணியும் அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் மலைச்சாமி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின்போது ஜமுனாராணியின் பெற்றோர் 35 பவுன் தங்க நகைகளை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர்.
கடந்த ஆண்டு ஜமுனா ராணி உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் தேவேந்திரன் தனது மகளுக்கு கொடுத்த 35 பவுன் தங்க நகைகளை திருப்பித் தருமாறு தேவேந்திரனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து தேவேந்திரன் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மலைச்சாமி மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.