திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பசுமலர்கள் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனலட்சுமியின் உறவினரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வங்கியில் ஏலம் விடும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக குமார் கூறினார்.

இதனை நம்பி தனலட்சுமி 42 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு குமார் நகைகளை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து தனலட்சுமி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமார், அவரது மனைவி பவானி, தாய் தமிழ்செல்வி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.