கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் கேரளாவை சேர்ந்த நகை வியாபாரியான அனலின்(48) என்பவர் வியாபாரம் தொடர்பாக தங்கி இருந்தார். நேற்று காலை மார்த்தாண்டம் பம்மத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு அனலின் சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனலின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அனலினின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.