தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின்சாரம் கணக்கடுக்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கை ஏற்ற தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள் தொழிற்சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கீட்டு பணி நடைபெறுகிறது. இந்த பணிக்கு பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு மின்மீட்டரை கணக்கெடுக்க ரூ.4ம், கிராமப்புறம் மலைப்பகுதியாக இருந்தால் ரூ.6 ம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தற்போது அவர்களுக்கான ஊதியத்தை மின்வாரியம் உயர்த்தியுள்ளது. அதன்படி மின்மீட்டர் ஒன்றை கணக்கெடுக்க ரூ.5ம் அதே கிராமம் அல்லது மலைப்பகுதியாக இருந்தால் ரூ.7 ம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.