
இந்திய தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது ஏப்ரல் ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
அதன்படி சேமிப்பு டெபாசிட் கணக்குகளுக்கு 4 சதவீதமும், 1 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 6.8 சதவீதமும், 2 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 6.9%, 3 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 7%, 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 7.5%, 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு 6.2%, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு 8.2%, மாத வருமான திட்டங்களுக்கு 7.4%, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டங்களுக்கு 7.7%, பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.1%, கிஷான் விகாஸ் பத்திரம் திட்டங்களுக்கு 7.5%, செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8 சதவீதமும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு டெபாசிட் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் போன்றவைகளுக்கு மட்டும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The rates of interest on various Small Savings Schemes for the first quarter (Q1) of financial year 2023-24 starting from 1st April, 2023 and ending on 30th June, 2023 have been revised as follows👇 pic.twitter.com/OwLr8MxhGU
— Ministry of Finance (@FinMinIndia) March 31, 2023