
புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலராக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர் தனது அவசர வேலையாக திருமயம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது எதிர்பக்கத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில் அரசு பேருந்தை முந்திக்கொண்டு வந்த இரு சக்கர வாகனம் வருவாய் கோட்டாட்சியர் கார் மீது வேகமாக மோதி உள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் டிரைவர் காமராஜ் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.