உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லக்ஷ்மி பாய் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியிலுள்ள குழந்தைகள் வார்டில் திடீரென்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு தீ மல மலவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்ததோடு 43 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீ விபத்தின் போது மருத்துவமனைக்கு வெளியே படுத்திருந்த யாகூப் மன்சூரி என்ற கூலி தொழிலாளி மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கரும்புகைக்கு இடையே 7 பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளார். ஆனால் இதே மருத்துவமனையில் பிறந்த அவரின் இரட்டை பெண் குழந்தைகள் மறுதினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று யாகூப் உருக்கத்துடன் கோரிக்கை பிடித்துள்ளார்.