
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சருக்கு நாட்டு மக்களை பற்றி எதாவது கவலை இருக்கிறதா ? நாட்டு மக்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. பல மாவட்டங்களில் மழை இருக்கிறது. சென்னையில் கடும் மழை இல்லை. கொஞ்சம் கொஞ்சம் பெய்த மழைக்கே கடுமையான அளவிற்கு தண்ணீர் தேங்கி , மக்கள் கஷ்டப்படுகின்ற அளவிற்கு இருக்கிறது என்றால், எப்படிப்பட்ட நிர்வாகம் என்று பாருங்கள்…
மக்கள் நல்வாழ்வுத்துறை அது நல்வாழ்வுத்துறையா ? மக்களுடைய நல்வாழ்வை கெடுக்கும் துறை. அந்த அளவிற்கு ஹாஸ்பிடலில் மருந்து கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டார் என்றால் வாங்க போகலாம் என்று…உங்களிடம் சொல்லிட்டா நாங்க வர முடியும். நாங்க போகிற இடத்திற்கு நீங்கள் வாங்கள்… கூட்டிட்டு போகிறேன்…. எத்தனை ஆஸ்பத்திரியில் மருந்து இருக்குன்னு நான் சொல்லுறேன்..
மருந்து இல்லை, எதுவுமே இல்லை. அதைப்பற்றி எதுவும் கவலை இல்லை… அவருக்கு கூட மராத்தான் ஓட்டப்பந்தயம் ஓட வேண்டும். முதலமைச்சர் உடன் வாக்கிங் போக வேண்டும். இதுதான் அவருடைய ஒரே aim. ஓட்டுப் போட்டு ஜனங்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்…
அந்த அடிப்படையில் மக்களுக்கு மருந்து கொடுப்பது, மருத்துவமனை நல்லா வைத்துக் கொள்வது கிடையாது.ஆட்சிக்கு வந்து 29, 30 மாதம் ஆகுது. இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது.அந்த அளவிற்கு அரசாங்க மருத்துவமனை கேலிக்கூத்தாகிவிட்டது. அரசாங்க மருத்துவமனை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது.