
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனைகள் ஐநா பாதுகாப்பு தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி நடக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் தென் கொரியாவும் இணைந்து பல்வேறு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகள் செய்து வருகின்றனர். இதனால் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே தென்கொரியாவில் நடைபெற்ற ராணுவ தினத்தின் போது அந்நாட்டு அதிபர் கூறியதாவது, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா-தென் கொரியாவின் ராணுவ படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும், வடகொரியா அதிபர் கிம்மின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த வடகொரியாவின் அதிபர், எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கு மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதோடு தென் கொரியா அதிபரின் பேச்சை விமர்சித்த அவர், நாட்டின் அமைதியை யார் அளிக்கிறார்கள் என்பதை இந்த கருத்து காட்டுகிறது என்று கூறினார். மேலும் கொரியாவில் பதற்றம் நிலவினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் எச்சரித்துள்ளார்.