தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பின்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் களம் 2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்!.

தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள்  உறுதியளித்தனர்.