மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025&26 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் இதனால் ஒரு சில பொருட்களின் விலை உயரலாம். ஒரு சில பொருட்களின் விலை குறையலாம். தற்போது வந்த தகவலின் அடிப்படையில் இந்த பட்ஜெட்டில் எந்த பொருட்களின் விலை உயரலாம் என்பது பற்றிய கணிப்புகளை இங்கு பார்ப்போம். முதலாவதாக எரிபொருளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக தங்கத்தின் விலை உயர்வு வாய்ப்பு இருக்கிறது.

இதனையடுத்து வாகனம் உள்ளிட்ட ஆட்டோ மொபைல் பொருட்களின் விலை அதிகரிக்கலாம். மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பட்ஜெட்டில் உணவு பொருட்களின் விலை 97 சதவீதம் வரை உயர்ந்தது. 2023 ஆம் ஆண்டு தக்காளி விலை உயர்ந்தது. பருவநிலை மாற்றங்கள், வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் தக்காளி விலை உயர்ந்தது. அப்போதைய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டதால் தங்கம் விலை சரிந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.