
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் கடுமையான மாசுபாடு நிலவுகின்றது. அதனை குறிப்பிட்ட அவர் டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் கூறினார். 3 நாட்கள் அங்கு இருந்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு தொற்று வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை சிவப்பு மண்டலத்தில் உள்ளது. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும். இதனை தடுப்பதற்கு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை தீவிர படுத்த வேண்டும். இந்த மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு களை காரணம். நாங்கள் ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக வேறு எரிபொருளை நான் ஆதரிக்கிறேன்.
புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து விட்டு, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் பைகளில் ரூ. 12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன் என்றார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீடு அறிக்கையை மேற்கோள் காட்டி இவற்றை அவர் தெரிவித்துள்ளார்.