திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூகத்தை கலக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, முத்துவேல் மற்றும் அவரது குடும்பம் கோயிலில் பரிகாரம் செய்ய வந்தபோது, அவரது மனைவி சத்யா (34) திடீரென சாமி ஆட தொடங்கினார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்யா, கோயிலுக்கு வந்ததில் கிடைத்த ஆன்மிக உற்சாகத்தால் ஏற்படும் மாற்றத்தில் சாமி ஆடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், கோயிலில் இருந்த அரிவாளை சத்யா கைப்பற்றி, திடீரென தனது கழுத்தை அறுத்துவிட்டார். இந்த விபரீதச் சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் அங்கு பெரும்பாலான மக்கள் சற்று நேரத்தில் உள்ளே திபு திபு என்று வந்தனர் . சத்யா திடீர் மரணம் அதிர்ச்சியடைய செய்தது. சத்யாவின் உடல் ரத்தம் வெள்ளத்தில் மிதந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.