திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேங்கனூரில் பழனியாண்டி என்பவர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று பழனி பழனியாண்டி வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பழனியாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.