தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் நவிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டையை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி துண்டு இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் சமையல் கரண்டிகள், கற்கள் மற்றும் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த தகராறில் 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.