உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி, மொத்தம் 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இந்நிலையில் மகா கும்பமேளா குறித்து தவறான செய்திகளை பரப்பிய 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து போன்ற பழைய வீடியோக்களை வெளியிட்டு, தவறான தகவல்களை பரப்பி, பதற்றம் ஏற்படுத்தி உள்ளன. அதனால் பல சமூக ஊடக கணக்குகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.