கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈத்தாமொழி ஆடரவிளை பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் நூலகத்தில் நூலகராக வேலை பார்த்து வருகிறார்.

நான் உறவினரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றபோது சபாபதி அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு கூட்டுறவு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை.

அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை விட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரும் சபாபதி மீது 2 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து சபாபதியை கைது செய்தனர்.