நெல்லை வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவன் சுனில் குமார். கடந்த 6 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய் திடீரென இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் மாணவன் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் இன்று பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவன் சோகத்துடனே தேர்வை எழுதிவிட்டு, வந்து இறுதிச்சடங்குகளை மேற்கொண்டார். இது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.