
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் தான் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, விக்ரம் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான ‘தளபதி 69’ என்ற படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் போன்ற பலர் நடிக்கின்றனர். இந்த படம் தான் விஜயின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விஜய் சினிமாவை விட்டுவிட்டு, அரசியலில் இறங்கியுள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தளபதி 69 படத்தில் நடிகரின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தளபதி 69 படம் நன்றாக நடைபெற்று வருகிறது. விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவது வருத்தமாக இருக்கிறது. அவர் அரசியலில் சாதிக்க நினைக்கிறார், அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறினார்.