
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும் அறநிலைத்துறை உத்தரவை அமல்படுத்த கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இதனை நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வைக்கப்பட்டது. அப்போது அவர் பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி நடராஜர் கோவிலை நிர்வகிக்க பொது தீட்சிதர் குழுவுக்கே அதிகாரம் உள்ளதாகவும், அதில் அறநிலைய அதில் தலையிட முடியாது என வாதிடப்பட்டது.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி கோவிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அறநிலையைத் துறை எப்படி தலையிட முடியும் என கேள்வி எழுப்பினர். பின்னர் நடராஜ தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலம் முடிந்து விட்டதாகவும், அவர் தில்லை காளியம்மன் கோவிலில் சேவை செய்து வருவதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி இருவழக்குகளையும் முன் வைத்துள்ளார். அதே சமயம் கோவில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிட அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமர்வு முடிவுக்கு விட்டு விடுவதாக நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.