
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்புவதாக உக்கிரன் குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின.
இந்நிலையில் போரில் 2 சீன வீரர்களை சிறை பிடித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து சண்டையிட்ட 2 சீன குடிமக்களை எங்கள் ராணுவம் பிடித்துள்ளது.
அவர்கள் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த கைதிகளின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் எல்லாம் எங்களிடம் உள்ளது. இது தொடர்பாக சீனாவை தொடர்பு கொள்ள நான் வெளியுறவு அமைச்சரை வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தி உள்ள நிலையில் தற்போது சீனா வீரர்கள் ரஷ்ய போரில் பிடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.