
அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், நம்மை எல்லாம் அரசியலில் ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம் – பார்போற்றம் தங்கம், நம்முடைய அங்கம், இதயத்து மன்னன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய அருள் ஆசியோடும்..
ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி இந்த இயக்கத்தை காட்டி காப்பாற்றிய டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியோடும், சேலத்து சிங்கம் – தென்னாட்டு தங்கம் – எங்களுடைய அங்கம் – அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி மதுரை மண்ணிலே நடைபெறுகின்ற வீர வரலாற்று பொன்விழா சிறப்பு மாநாட்டிலே பேசுகின்ற வாய்ப்பைத் தந்த கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் முதற்கண் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேறொன்றும் நான் பேச போவதில்லை. ஏனென்றால் அருமை அண்ணன் மரியாதைக்குரிய பொதுச்செயலாளர் உடைய சிறப்பு உரையை கேட்க நானும் தயாராக இருக்கிறேன். எனவே இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றிய உண்மையான தொண்டர்கள்தான் என்பதை இந்த மண்ணிற்கு உணர்த்தி காட்டிய மாநாடு தான் இந்த மாநாடு. மதுரையிலே கால் எடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதே மண்ணில் வந்தார். நாடோடி மன்னன் விழா அவரோடு நானும் வந்தேன். அப்போது எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளர் புரட்சித்தலைவரோடு இந்த மண்ணிற்கு வந்தேன். அந்த நாளிலிருந்து இன்று வரை மதுரை மண்ணிற்கு வருகிறேன். இங்கு கால் வைத்து சென்றவர் வெற்றியோடு தான் திரும்புவார்கள். அதனால் எடப்பாடியார் அவர்கள் நிச்சயமாக..
வெற்றியோடு தமிழகத்தின் முதல்வராக வருவார் என்ற நம்பிக்கை இந்த மாநாட்டின் மூலமாக ஏற்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தை அளிப்பதற்க்கோ, இந்த இயக்கத்தை துண்டாக்குவதற்கோ எந்த கொம்பனாலும் முடியாது. சரித்திர சாதனை உருவாக்கியிருக்கிற அருமையான மாநாடு தான் இந்த மாநாடு என்பதை இந்த நேரத்தில் சொல்லி கொள்கின்றேன்.