
சட்டப்பேரவையில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளில் ஈடுப்பட்டனர்.
உடனே நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.