
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த இனத்தில் பிறந்ததிலேயே தமிழ் பேரினத்திற்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்ற கனவு கண்ட ஒரே மகன் நம் உயிர் தலைவன் பிரபாகரன் மட்டும் தான். அவனுடைய பாட்டன்… என்னுடைய பாட்டன்.. உன்னுடைய பாட்டன்… அரசனுக்கு அரசன்…. அருண்மொழி சோழன்… அவன் அன்பு மகன் இராசேந்திர சோழனுக்கு இந்த கனவு இருந்திருந்தால் ? உலகில் பாதி நாடு தமிழர் நாடு. அவன் பொழுதுபோக்கு போரிட்டு போயிட்டான்.
இந்த இந்திய நில பரப்பு அடிமைப்பட்டு கிடைக்கும் போது எங்களுடைய பெருமைமிக்க… மதிப்புமிக்க…. தாத்தாக்கள் எங்களுக்கு செய்த துரோகம்…. தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவரும், பெருந்தலைவர் எங்கள் தாத்தா காமராஜரும் செய்த துரோகம். முகமது அலி ஜின்னா அடிமைப்பட்டு கிடக்கிற இந்த நிலப்பரப்பில் விடுதலைக்காக போராடும்போது…. ஆர்எஸ்எஸ், பிஜேபியில் இருந்த ஒருத்தன் ஒரு போராட்டமும் போராடவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ்ல இருக்குற மக்கள் எல்லாம் இந்த நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள்.
1946இல் வர வேண்டிய விடுதலை 1947 வரை தள்ளியதற்கு காரணம் முகமது அலி ஜின்னா. லார்டு மவுண்ட்பேட்டன் பிரபு கிட்ட போகும்போது ஜின்னாவை கன்வின்ஸ் பண்ணுங்க என சொன்னார். பாகிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் பிறகுதான் மத்தது என சொல்லிவிட்டார் முகமது அலி ஜின்னா . ஓராண்டு பிரச்சனை ஓடுது. எங்க தாத்தாங்க ரெண்டு பேரு கொஞ்சம் யோசிச்சிருக்க வேண்டாமா ? ஜின்னா எதுக்கு கேட்டுட்டு இருக்கான் யோசிச்சிருக்கணும்ல….
அதே மாதிரி முகமது அலி ஜின்னா என்ன யோசிக்கிறாரு ? ஆங்கிலேயன் ஆட்சி காலத்திலேயே இஸ்லாமிய மக்களை அடிக்கிறான், ஒழிகிறான். ஒருவேளை சுதந்திரம் இவனிடத்தில் போனால் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக இங்கு வாழ்வது சாத்தியம் இல்லை. அவனுக்கு அப்போதே மூளையில் பொரிதட்டிட்டு. காந்தி என்ன பன்னிருக்காரு ? ரெண்டு, மூணு பொதுக்கூட்டத்தில் முகமது அலி ஜின்னாவை வச்சிக்கிட்டு…
இந்தா நம்மோடு சிறுபான்மை மக்களின் தலைவர் முகமது அலி ஜின்னா உக்காந்து இருக்கிறார் அப்படி சொல்லிட்டாரு… காந்தி சொன்னது, முகமது அலி ஜின்னா பாக்குறாரு… நம்ம என்ன சிறுபான்மை? எல்லாரு மாதிரி தான நாமளும், இந்த நாட்டின் விடுதலைக்கு போராடுறோம். இவன் சிறுபான்மை, சிறுபான்மை என ஸ்பெஷல் மென்சன் பண்ணுறானே இந்த பரதேசி பையன்… எதுக்கு பண்றான் ? என முகமது அலி ஜின்னா யோசிச்சிறாரு… சரி இவனோட சேர்ந்து வாழ முடியாது. டைவர்ஸ் தான் என முடிவுக்கு வந்து, பாகிஸ்தான் தனி நாடு என கேட்கின்றார் என பேசினார்.