தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.எம் குமார். இவர் தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு அவன் இவன், குருவி, மலைக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் ஜி.எம் குமார் தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் ஜிஎம் குமார் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் அவருடைய பெயர் காரியமாணிக்கம். அந்த படத்தில் அவர் இறந்து விடுவதால் அவருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கிறார்கள். தற்போது அந்த பேனல் பக்கத்தில் இன்று தான் அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.