
டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்ற குழு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.