
மும்பை மற்றும் ஜபல்பூர் இடையே இயக்கப்படும் கரீப் ரதம் விரைவு ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12187 என்ற எண்ணுடைய ரயிலின் ஜி17 ஏசி பெட்டிக்குள் பாம்பு நுழைந்து சுற்றித் திரிந்தது. பயணிகள் இதைக் கண்டு அலறியடித்து ஓடினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு குழுவும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜி17 ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு, அந்தப் பெட்டி மூடப்பட்டு தனியாக நிறுத்தப்பட்டது. பாம்பு பிடிபட்டதா அல்லது வெளியேறியதா என்ற விவரம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.