கடந்த 2013ம் வருடத்தில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோரா என்பவரின் கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பெண்ணுக்கு அடி வயிற்றில் வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனையில் சோதனை செய்த போது பெருங்குடலில் நிரந்தர சேதம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 40 லட்சம் ரூபாயும், அதற்கு 2014-ம் ஆண்டு முதல் 12% வட்டியையும் சேர்த்து இழப்பீடாக வழங்க சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.