சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த போது திடீரென விஷவாயு தாக்கி தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கினர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாஸ்கரன் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.