
சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தீயை அணைத்துவிட்டு புறப்பட்டு செல்ல முயன்ற போது வாக்கி-டாக்கி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாக்கி டாக்கியை யாராவது திருடி சென்றார்களா? அல்லது வரும் போது எங்காவது தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.