கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.எஸ் பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சுருதி நெஞ்சுவலிப்பதாக கூறியதால் அறிவழகன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். சிறிது நேரத்தில் சுருதி தலைமுடிக்கு தடவும் ஹேர் ஆயிலை எடுத்து குடித்ததாக தெரிகிறது.
இதனால் மயங்கி விழுந்த சுருதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுருதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சுருதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.