திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் செந்தில் நகரில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த மாயாண்டி தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாலினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.