தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்து சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை(32) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், தம்பிதுரை மாணவியை கடத்தி சென்றது உறுதியானது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் தம்பிதுரையை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.